கோதபய- பான் கி மூன் சிறப்பு தூதர் நம்பியார் பேச்சு

பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்சேவை அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
நேற்று மாலை பாதுகாப்பு அமைச்சக செயலகத்தில் வைத்து இந்த சந்திப்பு நடந்துள்ளது. அதிபர் ராஜபக்சேவையும் இவர்கள் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
வடக்கு இலங்கையில் ஏற்பட்டுள்ள ரத்தக்களறியை நிறுத்தும் முயற்சியாகவே விஜய் நம்பியாரை பான் கி மூன் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
எந்தவித முன்னிறிவுப்பும் இன்றி விஜய் நம்பியாரை ஐ.நா. அனுப்பி வைத்துள்ளது.
முதலில் விஜய் நம்பியாரின் வருகையை இலங்கை அரசு விரும்பவில்லை. ஏற்கனவே இங்கிலாந்து நியமித்த சிறப்புத் தூதரான டெஸ் பிரவுனுக்கும் இலங்கை சம்மதம் தெரிவிக்கவில்லை.
இருப்பினும் பான் கி மூனின் ரகசிய முயற்சியாக விஜய் நம்பியார் அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது வருகைக்கு இலங்கை அரசு சம்மதம் தெரிவித்ததாம்.
இலங்கையின் வட பகுதிக்கு ஐ.நா. சார்பில் படகுகள், கப்பல்களை அனுப்புவது குறித்தும் விஜய் நம்பியார், இலங்கை அரசுடன் பேசவுள்ளார். தற்போது நடந்து வரும் தாக்குதல்கள் முடிந்தவுடன் அங்கிருந்து தப்பி வருவோரை வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்ல இவற்றைப் பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்படவுள்ளதாம்.
விஜய் நம்பியார் சீனாவுக்கான இந்திய தூதராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடும் சண்டை ..
இதற்கிடையே, பாதுகாப்பு வளையப் பகுதியில் இலங்கை ராணுவம் தொடர்ந்து கடும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. விடுதலைப் புலிகளும் பதிலுக்குத் தாக்கி வருவதால் உயிரிழப்பு மேலும் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் பாதுகாப்பு வளையப் பகுதியில் இலங்கைப் படைகள் தொடர்ந்து குண்டுகளை வீசித் தாக்கி வருவதற்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications