வேட்பு மனு: சித்தயோகத்துக்கு காத்திருக்கும் ஜெ!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் மே 13ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.
அஷ்டமி என்பதால் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யவில்லை. வட சென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, ஈரோட்டு, கோவை, பொள்ளாச்சி, திருச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களி்ல் மொத்தமே 33 சுயேச்சைகள் தான் மனு தாக்கல் செய்தனர்.
இன்று நவமி' என்பதால் இன்றும் முக்கிய வேட்பாளர்கள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வாய்ப்பில்லை.
சித்தயோகம் பார்க்கும் ஜெ...
வரும் 20ம் தேதி சுபமுகூர்த்த தினம் என்பதால், அன்று அதிக அளவில் வேட்பு மனுக்கள் தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அந்த தினத்தில் சித்தயோகமும் கூடி வருவதால் அன்று அதிமுக வேட்பாளர்கள் அனைவருமே கூண்டோடு மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும். 24ம் தேதி மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது. 25ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும்.












Click it and Unblock the Notifications