For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 இலங்கை அகதிகள் தனுஷ்கோடி வருகை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கையிலிருந்து 3 தமிழர்கள் அகதிகளாக ராமேஸ்வரம் வந்தனர். தலா ரூ. 25 ஆயிரம் பணம் கொடுத்து அவர்கள் கள்ளத் தோணிகளில் ராமேஸ்வரம் வந்தனர்.

இலங்கை மதிப்பில் இது ரூ. 50 ஆயிரத்திற்கு சமமாகும்.

வியாழக்கிழமை நள்ளிரவு வாக்கில் இவர்கள் தனுஷ்கோடி அருகே கொண்டு வந்து விடப்பட்டனர். பின்னர் தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீஸார் அவர்களை உள்ளூர் மீன் பிடி படகு மூலம் ராமேஸ்வரம் அழைத்து வந்தனர்.

படகோடிக்குக் கொடுக்க பணம் இல்லாததால், சில தங்க நகைகளையும் அவர்கள் கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அவர்களை தனுஷ்கோடி அருகே தண்ணீர் கூட இல்லாத ஒரு தீவில் இறக்கி விட்டு விட்டு படகோட்டி போய் விட்டார்.

அனைவரும் விசாரணைக்குப் பின்னர் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 100க்கும் மேற்பட்ட அகதிகள் தமிழகம் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மூன்று அகதிகளும் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X