லண்டன் புலிகள் இயக்க தலைவருக்கு தண்டனை
லண்டன்: வெடிகுண்டுத் தயாரிப்புக்கான கருவிகளை இலங்கைக்கு கடத்தியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க பிரிட்டன் பிரிவு தலைவர் அருணாச்சலம் சிரிசாந்தகுமார் குற்றவாளி என லண்டன் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
கிங்க்ஸ்டன் கிரவுன் கோர்ட்டில் இதுதொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அருணாச்சலம் குற்றவாளி என தீர்ப்பளித்தார்.
தெற்கு லண்டனில் வசித்து வருகிறார் அருணாச்சலம். 52 வயதாகும் இவர் பிரிட்டிஷ் தமிழர்கள் சங்கத்தின் நிறுவனர் ஆவார்.
இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அதில் வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் கருவிளை சப்ளை செய்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
இதுதவிர மேலும் 3 குற்றச்சாட்டுக்கள் குறித்து நீதிபதி தீர்ப்பளிக்கவில்லை. இந்த வழக்குகளில் ஜெகதீஸ்வரன் முரளீதரன் உள்ளிட்ட மேலும் 3 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications