கொளத்தூர் மணி மருமகன் வீட்டில் போலீஸ் ரெய்ட்
கோபிசெட்டிபாளையம்: பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் மருமகன் ராம இளங்கோவன் வீ்ட்டில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். வீட்டிலிருந்து நூற்றுக்கணக்கான சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது.
ராம இளங்கோவனின் வீடு கோபிசெட்டிபாளையம், புதிய மருத்துவமனை அருகே உள்ளது.
இங்கு டி.எஸ்.பி. சுப்ரமணியம் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் ராம இளங்கோவன் இல்லை.
வீ்ட்டிலிருந்து இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான நூற்றுக்கணக்கான சிடிக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இலங்கைத் தமிழர்களின் நிலையை விளக்கியும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு கோரியும் வீடு வீடாக சிடிகளை கொடுத்து வருகிறார் ராம இளங்கோவன் என்று கூறப்படுகிறது.
இதையடுத்தே ரெய்டு நடந்ததாக கூறப்படுகிறது. என்ன வகையான சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்ற விவரத்தை போலீஸார் தெரிவிக்கவில்லை.
சமீபத்தில்தான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி கொளத்தூர் மணி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications