For Quick Alerts
For Daily Alerts
Just In
இலங்கை அவலம்-ஜெவிடம் விளக்கிய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
சென்னை: இலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பேரவலம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து அங்கு சென்று திரும்பியுள்ள வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் விளக்கினார்.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஜெயலலிதா, ரவிசங்கரை சந்திப்பதற்காக நேற்று சென்னை வந்தார். அங்கு தனது இல்லத்தில் ரவிசங்கரை அவர் சந்தித்தார்.
அப்போது தான் இலங்கையில் சந்தித்த நிலை குறித்தும், தமிழர்கள் படும் அவலங்கள் குறித்தும் ரவிசங்கர், ஜெயலலிதாவிடம் விளக்கினார்.
மேலும், தமிழர்களின் அவல நிலை குறித்த வீடியோ படக் காட்சிகளையும் ஜெயலலிதாவுக்கு ரவிசங்கர் போட்டுக் காட்டி விளக்கினார்.
Comments
admk அதிமுக jaya ஜெயலலிதா அரசியல் தமிழ்நாடு meeting சந்திப்பு sri lankan tamils இலங்கைத் தமிழர்கள் tamilnadu sri sri ravishankar ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
Story first published: Friday, April 24, 2009, 17:02 [IST]