ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஏப். 30க்கு ஒத்திவைப்பு
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஏப்ரல் 30ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
நேற்று இந்த வழக்கு பெங்களூர் தனி கோர்ட்டில், விசாரணைக்கு வந்தது. அப்போது சிற்பு நீதிபதி முன்னோலி விடுமுறையில் இருப்பதால் அவருக்குப் பதில் நீதிபதி அன்டின் கலந்து கொண்டார்.
பின்னர் ஏப்ரல் 30ம் தேதிக்கு வழக்கு விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.
அன்றைய தினம், சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா, சொத்துக் குவிப்பு வழக்கோடு இணைக்கப்பட்ட லண்டன் ஹோட்டல் வழக்கை வாபஸ் பெறுவது குறித்து மனுவைத் தாக்கல் செய்வார்.
இந்த வழக்கை தமிழக அரசு திரும்பப் பெற்றுக் கொள்ள சமீபத்தில் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முறையான ஆதாரங்கள் இல்லாததால் இந்த வழக்கை வாபஸ் பெற திமுக அரசு முடிவு செய்ததாக கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த வழக்கை விட சொத்துக் குவிப்பு வழக்குதான் முக்கியமானது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் தடையால் அந்த வழக்கு விசாரணை முடங்கிக் கிடப்பதை தடுத்து, சொத்துக் குவிப்பு வழக்குக்கு உயிரூட்டவே, லண்டன் ஹோட்டல் வழக்கை திமுக அரசு வாபஸ் பெற முடிவு செய்ததாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications