மே 6ம் தேதி முதல் என்ஜினியரிங் விண்ணப்பங்கள்
சென்னை: தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மே 6ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளன. இத் தகவலை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்தார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும். இதற்கான விண்ணப்பங்கள் மே 6ம் தேதி முதல் வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் 58 மையங்களில் இந்த விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 500. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு கட்டணம் ரூ. 250.
விண்ணப்பங்களுடன் 450 பக்கங்கள் கொண்ட பொறியியல் கல்லூரிகள் பற்றிய விவரக் குறிப்பும் வழங்கப்படும். இந்த விண்ணப்பங்களை ஆன்-லைனிலும் டெளன்லோட் செய்து விண்ணப்பிக்கலாம்.
மே 31ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். ஜூன் 20ம் தேதிக்குள் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் முடிந்த பின், பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கும் என்றார்.
மருத்துவ விண்ணப்பங்கள் வினியோகம் எப்போது?:
இதற்கிடையே மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மே மூன்றாவது வாரத்தில் வழங்கப்படும் என்று தெரிகிறது.
-
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்.. தமிழ்நாடு முழுவதும் 9.09 லட்சம் பேர் எழுதுகின்றனர்!












Click it and Unblock the Notifications