For Daily Alerts
Just In
எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்த திருச்சி செளந்தரராஜன் மரணம்
திருச்சி: முன்னாள் அதிமுக அமைச்சர் திருச்சி செளந்தரராஜன் மரணமடைந்தார்.
எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் உணவு அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தவர் திருச்சி செளந்தரராஜன். அகில உலக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத் தலைவராகவும் இருந்தவர்.
ஜெயலலிதா கைக்கு அதிமுக வந்த பின்னர் சில காலம் அவருடன் பணியாற்றினார். பின்னர் தீவிர அரசியலிலிருந்து விலகியிருந்தார்.
இந்த நிலையில் இன்று திருச்சி செளந்தரராஜன் மரணமடைந்தார். உடல் நலக்குறைவால் அவர் சில காலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
செளந்தரராஜனுக்கு வயது 77 ஆகும். இவருக்கு மனைவியும், இரு மகள்களும் உள்ளனர்.
Comments
Story first published: Saturday, May 2, 2009, 12:02 [IST]