விதி மீறல் - தென்காசியில் புதிய தமிழகம் ஜீப் பறிமுதல்-டிரைவர் கைது

Subscribe to Oneindia Tamil

பாவூர்சத்திரம்:தென்காசிக்கு அருகே புதிய தமிழகம் கட்சியினர் தேர்தல் விதிமுறைகளை மீறியதை அடுத்து அவர்கள் பிரசாரம் செய்ய பயன்படுத்திய ஜீப்பை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பாவூர்சத்திரம் பகுதியில் ஜீப்பில் அவர்கள் பிரசாரம் மேற்கொண்டனர். தேர்தல் விதிகளின்படி வாகனங்களை ஏதாவது ஒரு இடத்தில் நிறுத்திய பின்னர் தான் பிரசாரம் செய்ய வேண்டும். ஆனால் புதிய தமிழகம் கட்சியினர் ஜீப்பில் சென்றபடியே பிரசாரம் செய்துள்ளனர்.

இதையடுத்து கல்லூரணி கிராம நிர்வாக அதிகாரி சவுந்திரபாண்டியன் பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் கோமதி சவுத்ரி பிரசார ஜீப்பை பறிமுதல் செய்தார். அதன் டிரைவரான கேரள மாநிலம் மூணாறை சேர்ந்த மாடசாமி மகன் முனியாண்டி என்பவரை கைது செய்து மீது வழக்கு பதிந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+