உலகின் நம்பிக்கை மிக்க நிறுவனங்கள் பட்டியலில் டாடா, எஸ்பிஐ!
உலகிலேயே மிகுந்த நம்பிக்கைக்குரிய நிறுவனங்கள் என்ற பெருமைக்குரிய பட்டியலில் இடம்பிடித்துள்ளன இந்தியாவின் டாடா மற்றும் பாரத ஸ்டேட் வங்கி குழுமங்கள்.
டாப் 200 நிறுவனங்கள் கொண்ட இந்தப் பட்டியலில் டாடாவுக்கு 11-வது இடமும், பாரத ஸ்டேட் வங்கிக்கு 29 வது இடமும் கிடைத்துள்ளது.
சர்வதேச அளவில் டாடாவின் நம்பிக்கைத் தன்மைக்கு 80.89 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டைச் செய்துள்ளது குளோபல் பல்ஸ் ஸ்கோர் எனும் புகழ்பெற்ற நிறுவனமாகும்.
இது மைக்ரோசாப்ட், கூகுள், ஜெனரல் எலெக்ட்ரிக், டொயோட்டா, கோக கோலா, இன்டெல் போன்ற சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதைக் காட்டிலும் அதிகமாகும்.
நம்பிக்கை, மதிப்பு, கவர்ச்சி மற்றும் நல்ல உணர்வு போன்ற காரணிகளின் அடிப்படையில் டாடாவுக்கு இந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
டாடா குழுமத்தில் மட்டும் மொத்தம் 98 நிறுவனங்கள் இயங்குகின்றன. டாடா தவிர மேலும் 16 இந்திய நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
உலகின் நம்பிக்கைக்குரிய முதல் நிறுவனமாக பெரெரோ நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நிறுவனங்களில் இன்போஸிஸ் நிறுவனத்துக்கு 39வது இடமும், லார்சன் அண்ட் டூப்ரோவுக்கு 47வது இடமும் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் நிலை கார் தயாரிப்பாளரான மாருதிக்கு 49வது இடம் கிடைத்துள்ளது.
ஹிந்துஸ்தான் யுனிலீவருக்கு 67வது இடமும், ஐடிசிக்கு 95வது இடமும் கிடைத்துள்ளது.
கனரா வங்கி சர்வதேச அளவில் நம்பிக்கைக்குரிய நிறுவனங்களில் 102-வது இடத்தையும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் 111வது இடத்தையும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 112வது இடத்தையும், விப்ரோ டெக்னாலஜிஸ் 116 வது இடத்தையும் பெற்றுள்ளது.
இந்தியாவின் நம்பர் ஒன் தனியார் நிறுவனமான ரிலையன்ஸ், நம்பகத் தன்மையில் பெற்றுள்ள இடம் 132. மகிந்திரா அண்ட் மகிந்திராவுக்கு 137வது இடமும், பார்தி ஏர்டெல்லுக்கு 163வது இடமும் கிடைத்துள்ளன.
பட்டியலில் உள்ள மற்ற இந்திய நிறுவனங்கள்:
பாங்க் ஆப் பரோடா - 174, பாரத் பெட்ரோலியம்-175, பஞ்சாப் நேஷனல் வங்கி - 177.












Click it and Unblock the Notifications