புல்மோடை இந்திய மருத்துவமனை வவுனியாவுக்கு மாற்றம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: வட இலங்கையில், புல்மோடை என்ற இடத்தில் இந்தியா அமைத்துள்ள தற்காலிக கள மருத்துவமனை, அங்கிருந்து வவுனியாவுக்கு மாற்ற்படுகிறது.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 52 டாக்டர்கள், நர்சுகள் அடங்கிய இந்திய மருத்துவ குழு புல்மோடை என்ற இடத்தில் தற்காலிக கள மருத்துவமனையை அமைத்து சிகிச்சை அளித்து வருகிறது.

தற்போது போரில் காயமடைந்து வருவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. ஆனால் புல்மோடை மருத்துவமனையில் அத்தனை பேருக்கும் சிகிச்சை அளிக்க வசதிகள் இல்லை.

எனவே வவுனியாவுககு இந்த மருத்துவமனையை மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வவுனியாவில் புதிய கள மருத்துவமனை அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார். புல்மோடை மருத்துவமனைதான் தற்போது வவுனியாவுக்கு கூடுதல் வசதிகளுடன் மாற்றப்படவுள்ளது.

வவுனியாவில் அதிகம் பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையிலான வசதிகளுடன் இந்த மருத்துவமனை செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துளளனர்.

போரினால் இடம் பெயர்ந்து வந்தோர், ராணுவத்தால் மீட்கப்பட்டவர்கள் என கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் வவுனியாவில்தான், வேலியால் அடைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் ராணுவத்தால் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+