பாரமவுண்ட் ஏர்வேஸின் சென்னை - கொல்கத்தா தினசரி விமானம்
இந்த விமானமும் தினசரி இயக்கப்படும். இதன் மூலம், அலுவல் ரீதியான பயணங்களை அடிக்கடி மேற்கொள்வோர் அதிகம் பயனடைவர் என பாரமவுண்ட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே கோவை, மதுரை, ஹைதராபாத், கொச்சி, புனே, அகமதாபாத் மற்றும் கோவை போன்ற நகரங்களுக்கு விமானங்களை இயக்கி வருகிறது பாரமவுண்ட். கடந்த மாதம்தான் முதல்முறையாக சென்னை- கொல்கத்தா விமானத்தை அறிமுகப்படுத்தியது இந்நிறுவனம்.
'ஒரே மாதத்துக்குள் மீண்டும் இரண்டாவது விமானத்தையும் இயக்கியுள்ளோம். இது வாடிக்கையாளர் விருப்பத்தை எந்த அளவு எங்கள் நிறுவனம் மதிக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு' என்றார் பாரமவுண்ட் நிர்வாக இயக்குநர் தியாகராஜன்.
வட கிழக்கு மாநில நகரங்களுக்கு மேலும் கூடுதல் விமானங்களை இயக்கவும் பாரமவுண்ட் உத்தேசித்துள்ளது. ஏற்கெனவே இந்த செக்டாரில் அதிக விமானங்களை இயக்கிய ஏர் டெக்கன், பெரும்பாலான வழித்தடங்களில் இப்போது சேவையை ரத்து செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.