கடலோர பாதுகாப்பு-அதிகாரிகளுடன் அந்தோணி ஆய்வு
டெல்லி: இலங்கையில் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், குறிப்பாக அதன் தலைவர் பிரபாகரனோ மற்றவர்களோ இந்திய கடல் பகுதி வழியாக தப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, கடற்படை அதிகாரிகளுட் ஆலோசனை நடத்தினார்.
இன்று நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில் கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தா மற்றும் மூத்த கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆனால் பிரபாகரனோ அல்லது பிற விடுதலைப் புலிகளின் தளபதிகளோ இந்திய கடல் எல்லைக்குள் தப்பி வர முடியாது என்று இலங்கை கூறியுள்ளது. தனது கடல் பகுதியில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாகவும் அது கூறியுள்ளது.
இருந்தாலும், விடுதலைப் புலிகளின் திறமை குறித்து இலங்கையை விட இந்தியாவுக்கு நன்கு தெரியும் என்பதால், இலங்கையின் பேச்சை அப்படியே நம்பி விடாமல் இந்திய கடலோரப் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் தென் கடலோரப் பகுதியில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
சமீபத்தில் தென் பிராந்திய கடற்படை தலைமை கமாண்டிங் அதிகாரி டேம்ளே கூறுகையில், விடுதலைப் புலிகள் மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளனர். எனவே அவர்கள் இந்திய கடற் பகுதி வழியாக தப்ப முயற்சிக்கலாம்.
குறிப்பாக இந்தியாவின் மேற்குக் கடற்பகுதியை அவர்கள் பயன்படுத்த வாய்ப்புள்ளது. அங்கு மர்மான முறையில் படகுகளின் நடமாட்டம் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
நான்கு அடுக்கு பாதுகாப்பை மேற்கொண்டிருப்பதாக இலங்கை கூறினாலும் கூட அது அவர்களது நாட்டு பாதுகாப்பை கருத்தில் கொண்டது. எனவே நமது கடற் பகுதியின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று கூறியிருந்தார்.
-
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications