For Daily Alerts
Just In
ரூபாய் மதிப்பு ஒரே நாளில் பெரும் உயர்வு!
மும்பை: இன்று ஒரே நாளில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.1.20 காசுகள் உயர்ந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இந்த அளவு உயர்ந்திருப்பது இதுவே முதல்முறை.
வெளிநாட்டு முதலீடுகள் அதிக அளவு இந்தியப் பொருளாதாரத்துக்குள் பாயும் என்ற நிலை உள்ளதாக இந்திய பொருளாதார நிபுணர்களும், வர்த்தகர்களும் தொடர்ந்து கூறிவருவதால் இன்று நாணய மாற்றுச் சந்தை துவங்கிய சில நிமிடங்களில் ரூபாயின் மதிப்பு 90 காசுகள் உயர்ந்தது.
பின்னர் அதுவே ரூ.1.20 ஆக அதிகரித்தது. இதுவரை காணாத மிகப்பெரிய உயர்வாக இது கருதப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.48.20 ஆக உள்ளது.
Comments
Story first published: Monday, May 18, 2009, 12:15 [IST]