கன்னியாகுமரியில் பாஜக தோல்வி-சமக பிரமுகர் மொட்டை
நாகர்கோவில்: கன்னியாகுமரி தொகுதியில் பாஜக தோல்வியடைந்ததற்கு வருத்தம் தெரிவித்து சமத்துவ மக்கள் கட்சியின் குமரி மாவட்ட செயலாளர் மொட்டை போட்டு கொண்டார்.
தமிழகத்தில் சமத்துவ மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி ஆகியவற்றுடன் பாஜக கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது.
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி செயலாளர் தியோடர் சாம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பாஜக வெற்றி பெற உழைத்தனர். ஆனால், பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் 2,54,474 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் ஹெலன் டேவிட்சனிடம் 68,472 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைடந்தார்.
இதற்கு வருத்தம் தெரிவித்து சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் தியோடர் சாம் மொட்டை போட்டு கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில்,
குமரி மாவட்டத்தில் மதவாதம் தலைவிரித்தாடுகிறது. பாஜகவை மதவாத கட்சி என்று பிரச்சாரம் செய்தவர்கள். தற்போது அங்கு மதவாதத்தை வெற்றி பெற வைத்துள்ளனர். இந்த செயல் வெட்க கேடானது. இதற்காக வருத்தம் தெரிவித்து நான் மொட்டை போட்டுள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications