For Daily Alerts
Just In
கச்சா எண்ணை விலை உயர்வு - பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்
டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 60 டாலராக உயர்ந்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை பேரலுக்கு 60 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புதிதாக பதவியேற்கவுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு இது முதல் சவாலாக உருவெடுத்துள்ளது.
கச்சா எண்ணை விலை உயர்வால் பெட்ரோல், டீசல், சமையல் எண்ணை ஆகியவற்றின் விலையை உயர்த்தியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் அரசு பதவியேற்றதும் முதல் வேலையாக விலை உயர்வை அறிவித்தால் அது கெட்ட பெயரை ஏற்படுத்தலாம் என்பதால் இதை சமாளிக்கும் மாற்று வழிகளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு யோசிக்கும் என்று தெரிகிறது.
Comments
Story first published: Wednesday, May 20, 2009, 18:29 [IST]