தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க இந்தியா வலியுறுத்தல்

விடுதலைப் புலிகளுடனான போரை முடித்து விட்டோம் என இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில், இந்தியத் தூதர்களாக எஸ்.எஸ்.மேனனும், எம்.கே.நாராயணனும் கொழும்பு சென்றுள்ளனர். இன்று அதிபர் ராஜபக்சேவை சந்தித்து தமிழர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்துப் பேசவுள்ளனர்.
கொழும்பு கிளம்புவதற்கு முன்பு முதல்வர் கருணாநிதியை நாராயணன் சந்தித்து ஆலோசனை பெற்று சென்றுள்ளார்.
இந்தியாவின் ரூ. 500 கோடி மறுசீரமைப்பு உதவிகள் குறித்தும் இலங்கை அதிபரிடம் மேனன், நாராயணன் குழு சொல்லவுள்ளது. மேலும், என்ன மாதிரியான உதவிகளை இந்தியாவிடமிருந்து இலங்கை எதிர்பார்க்கிறது என்பதையும் இந்தியா கேட்கவுள்ளது.
இந்தப் பயணத்தின்போது முக்கிய அம்சமாக, தமிழர் பகுதிகளி்ல் தமிழர்களுக்கு சுயாட்சி உரிமையை வழங்க வேண்டும். அதிகாரங்களை சம அளவில் பகிர்ந்தளிக்க இலங்கை அரசு முன்வர வேண்டும் எனவும் இந்தியா கோரவுள்ளது.
தங்களது பயணத்தின்போது பிரபாகரன் உண்மையிலேயே இறந்து விட்டாரா என்பதையும் ராஜபக்சேவிடம் தெளிவுபடுத்திக் கொள்ளவும் மேனன், நாராயணன் திட்டமிட்டுள்ளனர்.
டெல்லியில் முதல்வரைச் சந்தித்த பின்னர் வெளியே வந்த நாராயணனிடம் செய்தியாளர்கள், பிரபாகரன் இறந்து விட்டாரா என்று கேட்டதற்கு, எங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி அவர் இல்லை. இருப்பினும் இதை நாங்கள் இலங்கை அரசிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வோம். அதன் பிறகு உங்களுக்கும் தெரிவிக்கிறேன் என்று கூறினார் என்பது நினைவிருக்கலாம்.
இதற்கிடையே இன்னும் ஓரிரு நாட்களில், 30 டன் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை விமானம் மூலம் இந்தியா, இலங்கைக்கு அனுப்பி வைக்கவுள்ளது.
அந்த விமானத்தில் 27 பேர் அடங்கிய மருத்துவக் குழுவும் செல்லவுள்ளது. வவுனியாவில் அமைக்கப்படவுள்ள மருத்துவ மையத்தில் இந்தக் குழு பணியாற்றும்.
-
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன்












Click it and Unblock the Notifications