தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க இந்தியா வலியுறுத்தல்

விடுதலைப் புலிகளுடனான போரை முடித்து விட்டோம் என இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில், இந்தியத் தூதர்களாக எஸ்.எஸ்.மேனனும், எம்.கே.நாராயணனும் கொழும்பு சென்றுள்ளனர். இன்று அதிபர் ராஜபக்சேவை சந்தித்து தமிழர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்துப் பேசவுள்ளனர்.
கொழும்பு கிளம்புவதற்கு முன்பு முதல்வர் கருணாநிதியை நாராயணன் சந்தித்து ஆலோசனை பெற்று சென்றுள்ளார்.
இந்தியாவின் ரூ. 500 கோடி மறுசீரமைப்பு உதவிகள் குறித்தும் இலங்கை அதிபரிடம் மேனன், நாராயணன் குழு சொல்லவுள்ளது. மேலும், என்ன மாதிரியான உதவிகளை இந்தியாவிடமிருந்து இலங்கை எதிர்பார்க்கிறது என்பதையும் இந்தியா கேட்கவுள்ளது.
இந்தப் பயணத்தின்போது முக்கிய அம்சமாக, தமிழர் பகுதிகளி்ல் தமிழர்களுக்கு சுயாட்சி உரிமையை வழங்க வேண்டும். அதிகாரங்களை சம அளவில் பகிர்ந்தளிக்க இலங்கை அரசு முன்வர வேண்டும் எனவும் இந்தியா கோரவுள்ளது.
தங்களது பயணத்தின்போது பிரபாகரன் உண்மையிலேயே இறந்து விட்டாரா என்பதையும் ராஜபக்சேவிடம் தெளிவுபடுத்திக் கொள்ளவும் மேனன், நாராயணன் திட்டமிட்டுள்ளனர்.
டெல்லியில் முதல்வரைச் சந்தித்த பின்னர் வெளியே வந்த நாராயணனிடம் செய்தியாளர்கள், பிரபாகரன் இறந்து விட்டாரா என்று கேட்டதற்கு, எங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி அவர் இல்லை. இருப்பினும் இதை நாங்கள் இலங்கை அரசிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வோம். அதன் பிறகு உங்களுக்கும் தெரிவிக்கிறேன் என்று கூறினார் என்பது நினைவிருக்கலாம்.
இதற்கிடையே இன்னும் ஓரிரு நாட்களில், 30 டன் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை விமானம் மூலம் இந்தியா, இலங்கைக்கு அனுப்பி வைக்கவுள்ளது.
அந்த விமானத்தில் 27 பேர் அடங்கிய மருத்துவக் குழுவும் செல்லவுள்ளது. வவுனியாவில் அமைக்கப்படவுள்ள மருத்துவ மையத்தில் இந்தக் குழு பணியாற்றும்.
-
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா?












Click it and Unblock the Notifications