2 முறை இலங்கையிலிருந்து தப்ப முயன்றார் பிரபாகரன் - கடற்படை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையிலிருந்து இந்தியாவுக்கோ அல்லது மலேசியாவுக்கோ தப்ப 2 முறை பிரபாகரன் முயன்றதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

ஆனால் இலங்கைக் கடற்படையினர், கடற் பகுதியில் முழு அளவில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததால் இது முடியாமல் போனதாகவும் அது கூறுகிறது.

இதுகுறித்து கடற்படை செய்தித் தொடர்பாளர் தசநாயகே கூறுகையில், இரு முறை பிரபாகரன் இலங்கையிலிருந்து தப்ப முயற்சி செய்தார். இந்தியா அல்லது மலேசியாவுக்கு அவர் தப்பத் திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது.

ஆனால் கடற்படையின் தீவிர கண்காணிப்பு மற்றும் முற்றுகை காரணமாக அவரால் அது முடியவில்லை. இதனால், தொடர்ந்து போர்ப் பகுதியிலேயே அவர் இருக்க நேரிட்டது என்று கூறியுள்ளார் அவர்.

நீர்மூழ்கிக் கப்பல் மூலம் பிரபாகரன் தப்பிச் செல்லக் கூடும், மலேசியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஏதாவது ஒரு நாடுக்கு அவர் தப்பிச் செல்லக் கூடும் என முன்பு செய்திகள் வெளியாகின என்பது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+