சென்னை அருகே கிளை அமைக்கும் தென் ஆப்பிரிக்காவின் கிரையோலர்
சென்னை: பிரான்ஸ் நாட்டின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான கிரையோலர் எஸ்ஏ நிறுவனம், சென்னை அருகே அச்சிரப்பாக்கத்தில் ரூ. 45 கோடி முதலீட்டில் தனது கிளையைத் திறக்கிறது.
கிரையோஜெனிக் வாயுக்களான ஆக்சிஜன், நைட்ரஜன், திரவ இயற்கை எரிவாயு ஆகியவற்றை இருப்பு வைக்கும் டேங்குககளை இந்த ஆலை தயாரிக்கும்.
வாயுக்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வது கடினமானது. ஆனால் அதை திரவ நிலைக்கு மாற்றி இருப்பு வைத்து கொண்டு செல்வது எளிதானதாகும். இதுதொடர்பான தொழில்நுட்பத்தில் கிரையோலர் நிறுவனம் சிறந்து விளங்குகிறது.
இந்த நிறுவனம் குறித்து கிரையோலர் ஆசியா பசிபிக் நிறுவன நிர்வாக இயக்குநர் ரவீன் மிர்சந்தானி கூறுகையில், முதலாவது கட்ட கட்டுமானம் 13 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும். அடுத்த ஆண்டும் இந்த ஆலை இயங்கத் தொடங்கும்.
முதல் ஆண்டில், பத்து முதல் 60 கிலோ லிட்டர் கொள்ளளவிலான 250 டேங்குகள் தயாரிக்கப்படும். 2வது கட்டத்தில், 300 கிலோ லிட்டர் கொள்ளளவிலான டேங்குகள் வரை தயாரிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications