மக்களவைத் தேர்தலில் 'ஓ' போட்ட 18,162 பேர்!
சென்னை: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 18,162 பேர் 49 'ஓ' படிவத்தை பயன்படுத்தி, யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று பதிவு செய்துள்ளதாகவும் புதுக்கோட்டையில் தான் அதிகபட்சமாக 12,366 பேர் இந்த படிவத்தை பயன்படுத்தியுள்ளனர் என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறினார்.
மக்களவைத் தேர்தலில் பிற மாநிலங்களில் ரேஷன் கார்டை அடையாள அட்டையாக பயன்படுத்தி மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் அந்த அனுமதி மறுக்கப்பட்டதற்குக் காரணமான நரேஷ் குப்தாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 732 வாக்கு சாவடிகளில் வழக்கத்தை விட 15 சதவீதம் வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளன.
வாக்களிக்க விரும்பாத 18,162 பேர் 49 'ஓ' படிவத்தை பயன்படுத்தி, யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டையில் தான் அதிகபட்சமாக 12,366 பேர் இந்த படிவத்தை பயன்படுத்தியுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் படிவம் 6யை பயன்படுத்தி தங்கள் பெயர்களை சேர்க்கலாம்.
ரேஷன் கார்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதால் தான் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் அதனை ஒரு ஆவணமாக பயன்படுத்துவதை ஏற்க முடியவில்லை. அதனால் தான் புகைப்படத்துடன் கூடிய 13 மாற்று ஆவணங்களை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ரேஷன் கார்டுகளை ஒரு ஆவணமாக ஏற்க வேண்டும் என்று எந்த அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையத்திடம் கோரவில்லை. தேர்தல் முடிந்த பிறகு தான் இது பற்றிய பிரச்சனைகள் வந்துள்ளன.
என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குக்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படும் என்றார்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications