பெட்ரோல் விலை உயருமா?
லக்னெள: பெட்ரோல் விலை நிர்ணயம் விரைவில் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும் என்றாலும் விலையை இப்போதைக்கு உயர்த்துவதாக திட்டம் இல்லை என்றார் மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாத்.
அவர் கூறுகையில், உலக அளவில் எண்ணெய் விலையில் ஏற்படும் சாதகமான மாறுதல்கள் முழுமையாக மக்களைச் சென்று அடைய என்னென்ன வழிகள் உள்ளனவோ அவற்றை ஆராய்ந்து வருகிறோம்.
காரணம் சாதாரண மனிதன் பாதிக்கக் கூடாது என்ற இந்த அரசின் எண்ணமே. ஆனால் இப்போதைக்கு சர்வதேச எண்ணெய் மார்க்கெட்டில் நல்ல செய்தி என ஏதுமில்லை. கச்சா எண்ணை விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. இருந்தாலும் விலை உயர்வை இப்போது அமல் படுத்தும் யோசனை இல்லை.
சமையல் கேஸ் போதுமான அளவில் இருக்கிறது. எனவே தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. சில பகுதிகளில் போக்குவரத்து தாமதம் காரணமாக சிலிண்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். அதையும் சரி செய்துவிடுவோம் என்றார்.