பட்டதாரி இளைஞர்களை திரட்டும் நக்சலைட்டுகள்
ஹைதராபாத்: ஆந்திராவில் படித்த பட்டதாரி இளைஞர்களை தங்களது இயக்கத்தில் சேர்க்கும் முயற்சியில் நக்சலைட்டுகள் ஈடுபட்டுள்ளனர். வீடு வீடாக சென்று இளைஞர்களை அவர்கள் மூளைச் சலவை செய்து இயக்கத்தில் இணைத்து வருகின்றனராம்.
ஆந்திராவில் மாவேயிஸ்ட் நக்சலைட்டுகள் ஊழல் தலைவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் ஊழல் தலைவர்களின் கொலை பட்டியல் ஒன்றை வெளியிட்டனர். அதில் முதல்வர் ராஜசேகர ரெட்டி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது.
இதையடுத்து ஆந்திர அரசு நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணியை தீவிரப்படுத்தியது. இதற்காக ஏராளமான அதிரடிப்படையினர் நக்சலைட்டுகள் பதுங்கிய பகுதியை சுற்றி வளைத்தனர்.
இதில்,முக்கிய தலைவர்கள் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பல நக்சலைட்டுகள் காட்டுப் பகுதிகளுக்கு தப்பி ஓடி விட்டனர்.
இந்நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டம் அரக்லோயா பகுதியில் ஏராளமான நக்சலைட்டுகள் புகுந்துள்ளனர். அவர்கள் கிராமம், கிராமமாக சென்று பட்டதாரி இளைஞர்களை சந்தித்து தங்கள் இயக்கத்தில் சேருமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு நக்சலைட் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications