கோழி-பன்றி இறைச்சி இறக்குமதிக்கு மத்திய அரசு தடை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பன்றிக் காய்ச்சல் இந்தியாவிலும் பரவத் தொடங்கியிருப்பதையடுத்து, குறிப்பிட்ட சில பறவைகள், விலங்குகள் மற்றும் அவற்றின் இறக்குமதிக்கு இந்திய அரசு தடைவிதித்துள்ளது.

இதுகுறித்து அயல் வாணிக இயக்ககம் விடுத்துள்ள அறிக்கை:

குறிப்பிட்ட சில பறவைகள் அல்லது கால்நடைகள் (கோழி மற்றும் சில வீட்டு வளர்ப்பு பறவை தவிர) இறக்குமதி செய்ய இந்திய அரசு தடை விதித்துள்ளது. இவற்றின் இறைச்சியை இறக்குமதி செய்யவும் அனுமதி இல்லை.

குறிப்பாக பன்றிக் காய்ச்சல் பரவுவதற்குக் காரணமானவை எனக் கருதப்படும், முட்டை மற்றும் கோழி இறைச்சி, உயிருடன் உள்ள பன்றிகள், பதப்படுத்தப்படாத தோல் பொருட்கள், இறகுகள் போன்றவற்றை இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஏவியன் இன்ப்ளூயன்ஸா நோய் பாதிப்புள்ள நாடுகளிலிருந்து கோழிகளைக் கூட இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது, என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மொத்தம் 33 நாடுகளில் இதுவரை ஸ்வைன் ப்ளூ எனப்படும் H1N1 பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உள்ளதாக ஐநா அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவும் அடங்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+