வெடிகுண்டு-வள்ளியூர் பஞ்சாய துணை தலைவர் கைது
நெல்லை: வள்ளியூர் நகர பஞ்சாயத்து கூட்டத்தில் வெடிகுண்டு வீசவேண்டும் என்ற நோக்கத்தில் வந்த பஞ்சாயத் துணை தலைவரை போலீசார் மடக்கிபிடித்து கைது செய்தனர். அவரது பைக்கில் இருந்து இரண்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர்.
வள்ளியூர் மெயின் ரோட்டில் நேற்று போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தார். அப்போது வள்ளியூர் பஞ்சாயத் துணை தலைவர் சண்முகபாண்டி வந்த பைக்கை சோதனை செய்தனர். அதில் அவர் பைக்கில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் போலீசாரை தாக்கிவிட்டு வெடிகுண்டுகளுடன் தப்பியோட முயன்றார். ஆனால் உடனடியாக சுதாரித்து கொண்ட போலீசார் அவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். இது குறித்து எஸ்பிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து சண்முகபாண்டியிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
சண்முக பாண்டியன் மீது ஏற்கனவை கொலை, கட்டபஞ்சாயத்து, கொள்ளை என பல புகார்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவர் நேற்று வள்ளியூரில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்திலு குழப்பம் விளைவிக்க வேண்டும் என்ற கொடிய நோக்கத்துடன் அந்த வெடி குண்டுகளை கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.