900 ஊழியர்களை நியமிக்கும் யெஸ் பேங்க்!
டெல்லி: தனியார் வங்கியான யெஸ் பேங்க் அடுத்த 9 மாதங்களில் 900 புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதாக அறிவித்துள்ளது.
இந்த நிதியாண்டில் கடன் வழங்கலில் 40 சதவிகித வளர்ச்சியை எட்டுவதை இலக்காக வைத்துள்ள யெஸ் வங்கி, வர்த்தகத்தை மேலும் விரிவாக்க நடப்பு நிதியாண்டில் 900 சிறப்பு நிலை ஊழியர்கள் மற்றும் இறுதிநிலை ஊழியர்களை நியமிக்க உள்ளது.
இதுகுறித்து வங்கியின் சிஇஒ ராணா கபூர் கூறுகையில், செப்டம்பருக்குள் முதல் கட்டமாக 500 இறுதிநிலை ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், அதற்கடுத்த மாதங்களில் மற்ற பணியாளர்களையும் நியமித்துவிடுவோம் என்றும் தெரிவித்தார்.
இனி வரும் காலங்களில் தெரிந்தெடுத்த சில தொழில்களில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கப் போவதாக யெஸ் பேங்க் அறிவித்துள்ளது. அதன்படி வேளாண் வர்த்தகம், உள்கட்டமைப்பு, எரிசக்தி துறை, தொலைத் தொடர்பு மற்றும் சுகாதாரத் துறைகளில் வரும் நாட்களில் அதிக வளர்ச்சி ஏற்படும் என்றும், இவற்றில் முதலீடு செய்வோரை ஊக்குவிக்கும் வகையில் வங்கியின் கடன் வழங்கல் அமையும் என்றும் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications