வவுனியாவில் புலிகள் எனக் கூறி 3 தமிழர்கள் சுட்டுக் கொலை
வவுனியா: வவுனியாவில் 3 தமிழ் இளைஞர்களை விடுதலைப் புலிகள் எனக் கூறி போலீஸார் சுட்டுக் கொன்று விட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், 3 பேர் சைக்கிள் ஒன்றில் நெல்குளம் என்ற இடத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்தனர்.
அவர்களை போலீஸாரின் சிறப்பு அதிரடிப்படையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட முயன்றனர்.ஆனால் அதை ஏற்க மறுத்த அந்த மூன்று பேரும் போலீஸாரைத் தாக்க முயன்றனர்.
இதையடுத்து போலீஸார் அவர்கள் மூன்று பேரையும் சுட்டுக் கொன்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வன்னிப் பகுதியில் உள்ள புலிகளின் முன்னாள் பதுங்குமிடங்களில் ராணுவம் தீவிர சோதனை நடத்தி வருகிறது. அங்கிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்படடு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஸ்வமடு, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, வெள்ள முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நேற்று பெருமளவிலான கையெறி குண்டுகள், கண்கணிவெடிகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.