மாவோயிஸ்டுகளிடமிருந்து மீட்க லால்கர் நகருக்குள் துணை ராணுவம் நுழைந்தது

நக்சலைட்டுகளின் பிடியில் உள்ள லால்கர் நகர காவல் நிலையத்தை நோக்கி துணை ராணுவப்படையினரும், போலீஸாரும் முன்னேறி வருகின்றனர். இன்னும் 2 கிலோமீட்டர் தூரத்தில்தான் காவல் நிலையம் உள்ளது.
சிஆர்பிஎப், எல்லைப் பாதுகாப்புப் படை, மாநில ஆயுதப் போலீஸ், கிழக்கு எல்லைப்புற துப்பாக்கிப் படை, கொல்கத்தா போலீஸார் இந்த படையில் இடம் பெற்றுள்ளனர்.
கவச வாகனங்களில், முன்னேறி வரும் துணை ராணுவப் படையினர், பல்வேறு வகையான ஆயுதங்களையும் கையோடு கொண்டு சென்றிருக்கின்றனர்.
ராணுவம் கிடையாது - அந்தோணி
இதற்கிடையே, நக்சலைட்டுகளை ஒடுக்க ராணுவத்தை அனுப்பும் திட்டம் இல்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மாநில போலீஸாருக்கும், துணை ராணுவப் படையினருக்கும் ஆலோசனைகள் உள்ளிட்ட உதவிகளைத்தான் ராணுவம் தர முடியும். நேரடியாக அவர்களை மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடான சண்டையில் ஈடுபடுத்தும் சாத்தியம் இல்லை.
லால்கர் நக்சலைட் பிரச்சினை ஒட்டுமொத்த நாட்டுக்கும் மிகப் பெரும் கவலையாக மாறியுள்ளது. மாநில போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் இந்த சவாலை சந்திப்பார்கள் என நம்புகிறோம் என்றார் அவர்.
நக்சலைட்டுகளுடன் படையினர் கடும் போராட்டம்..
இதற்கிடையே லால்கர் பகுதியில் நிலைமை மேலும் மோசமாகி வருகிறது. நிலவெடி தாக்குதல், துப்பாக்கிச் சூடு மூலம் துணை ராணுவப்படையினரையும், போலீஸாரையும் அச்சுறுத்தி வருகின்றனர் மாவோயிஸ்டுகள்.
நேற்று மாலை பிரகதா பஜார் பகுதியில், போலீஸ் ஜீ்ப்பை நக்சலைட்டுகள் நிலவெடி வைத்துத் தகர்த்தனர். இதில் 2 போலீஸார் காயமடைந்தனர்.
இந்த நிலையில், பாதுகாப்புப் படையினர் தற்போது லால்கரிலிருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளனர். லால்கர் மட்டுமல்லாது அதைச் சுற்றிலும் உள்ள 50 கிராமங்களில் நக்சலைட்கள் புகுந்துள்ளதால் பாதுகாப்புப் படையினரின் பணி கடும் சவாலாக மாறியுள்ளது.
கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கும் கருவிகள், வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் கருவிகளின் உதவியுடன் பாதுகாப்புப் படையினர் முன்னேறி வருகின்றனர். மேலும், கிராமங்களில் புகுந்து வீடு வீடாகவும் சோதனை போடப்பட்டு வருகிறது.
நக்சல் தலைவர் தப்பினார்...
மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளை இயக்கி வருவது கோடீஸ்வர் ராவ் என்ற மாவோ தலைவர் எனத் தெரிய வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு வரை இவர் லால்கரில்தான் தங்கியிருந்துள்ளார். ஆனால் தற்போது அவரும், அவரது அமைப்பின் முன்னணித் தலைவர்கள் சிலரும் தப்பி விட்டதாக தெரிகிறது.
கோடீஸ்வர் ராவ் சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பின் பொலிட்பீரோ உறுப்பினர் ஆவார். இவருக்கு கிஷன்ஜி, முரளி, பிமல், பிரகலாத், ராம்ஜி, பிரதீப், ஸ்ரீதா என்று பல பெயர்கள் உள்ளனவாம்.
மேற்கு வங்கம், ஒரிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் நக்சல் வேலைகளைச் செய்யும் பொறுப்பு இவரிடம்தான் உள்ளது. முன்பு கொல்கத்தாவில்தான் வசித்து வந்தார் ராவ். அங்கிருந்தபடி லால்கர், பலுபானி, சல்பானி, பேல்பகாரி ஆகிய இடங்களுக்கு அடிக்கடி சென்று ஆதரவு திரட்டி வந்துள்ளார் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.
-
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications