சென்னை to நாகர்கோவில்-செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்
சென்னை: பயணிகள் நெரிசலைக் கருத்தில் கொண்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நாகர்கோவில், செங்கோட்டைக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வாரந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரயில் (0637) சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு ஜுலை 2, 9, 16, 23, 30 ஆகிய நாட்களில் இரவு 8.25 மணிக்கு புறப்படும்.
மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு 3, 10, 17, 24, 31 ஆகிய நாட்களில் மதியம் 1.30 மணிக்கு இந்த சிறப்பு ரயில் (0638) கிளம்பும்.
சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வாரந்திர சிறப்பு ரயில் (0639) ஜுன் 29, ஜுலை 6, 13, 20, 27 ஆகிய நாட்களில் இரவு 6.40 மணிக்கு கிளம்பும்.
மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து எழும்பூருக்கு ஜுன் 30, ஜுலை 7, 14, 21, 28 ஆகிய நாட்களில் மதியம் 1.30 மணிக்கு கிளம்பும்.
செங்கோட்டைக்கு..
சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு வாரந்திர சிறப்பு ரயில் (0609) ஜுலை 4, 11, 18, 25, ஆகஸ்டு 1 ஆகிய நாட்களில் இரவு 8.25 மணிக்கு இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜுலை 5, 12, 19, 26, ஆகஸ்டு 2 ஆகிய நாட்களில் மதியம் 2.30 மணிக்கு இயக்கப்படும்.
சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வாரந்திர சிறப்பு ரயில் (0651) ஜுன் 30, ஜுலை 7, 14, 21, 28 ஆகிய நாட்களில் மதியம் 3.40 மணிக்கு இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜுன் 29, ஜுலை 6, 13, 20, 27 ஆகிய நாட்களில் இரவு 7.40 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
மங்களூருக்கு..
இதேபோல நாகர்கோவிலில் இருந்து மங்களூருக்கு வாரந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
நாகர்கோவிலில் இருந்து மங்களூருக்கு ஜுலை 5, 12, 19, 26 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் மதியம் 1.30 மணிக்கு இயக்கப்படுகிறது.
மறுமார்க்கத்தில் மங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு ஜுலை 6, 13, 20, 27 ஆகிய நாட்களில் மதியம் 1.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ஆடிப்பூரம் திருவிழாவையொட்டி 22.7.2009 முதல் 27.07.2009 வரை 5 நாட்கள் மேல்மருவத்தூரில் சென்னை எழும்பூரில் இருந்து செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ் உள்பட குறிப்பிட்ட சில ரயில்கள் 1 நிமிடம் நின்று செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.