பிஹெச்டி-இந்தியாவை முந்துகிறது சீனா
பெங்களூர்: ஆண்டுதோறும் வெற்றிகரமாக பிஹெச்டி முடிப்பவர்களின் எண்ணிக்கையில் சீனா வேகமாக முன்னேறி வருகிறது. இதில் விரைவில் இந்தியாவை முந்திவிடும் என கூறப்படுகிறது.
விவசாயத்தில் துவங்கி அனைத்திலும் இந்தியாவுக்கு கடும் போட்டி கொடுத்து வரும் சீனா பிஹெச்டி படிப்புகளில் சவால் கொடுக்கும் அளவுக்கு அசுர வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவில் பிஹெச்டி பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், அதே சமயத்தில் சீனாவில் இந்த வளர்ச்சி 85 சதவீதமாக இருக்கிறது. இதனால் சீனா விரைவில் இந்தியாவை முந்திவிடும் என கூறப்படுகிறது.
இதற்கு சீனாவில் ஏற்பட்டு்ள்ள முன்னேற்றம் மட்டுமல்ல இந்தியாவில் பிஹெச்டி படிப்பில் ஏற்பட்டுள்ள பின்னடைவும் காரணம்.
இந்தியாவில் பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களில் சுமார் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களே பிஹெச்டி பட்டம் வாங்குகின்றனர் என இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.
இதனால் இந்தியாவில் விரைவில் பிஹெச்டி பட்டம் முடித்தவர்களுக்கு கடுமையான தேவை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இதையடுத்து பிஹெச்டி பட்டம் பெற நினைப்பவர்களுக்கு பல்வேறு வழிமுறைகளை அரசு செய்து கொடுக்க வேண்டும். உயர் கல்வி திட்டத்தில் நிறைய மாறுதல்களை கொண்டு வர வேண்டும். பிஹெச்டி பட்டத்தில் நேரடியாக நுழைய நான்கு ஆண்டு படிப்புகளை கொண்டு வர வேண்டும் போன்ற கோரிக்கைகள் மத்திய அரசு முன் வைக்கப்பட்டுள்ளது.
-
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications