For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிசம்பரில் அதிபர் தேர்தல்-ராஜபக்சே திட்டம்?

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு: விடுதலைப் புலிகளுடனான போரில் வென்ற பெரும் மகிழ்ச்சியி்ல் இருக்கும் அதிபர் ராஜபக்சே, டிசம்பர் மாதத்திலேயே அதிபர் தேர்தலை நடத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு முன்பாக தெற்கு மாகாண சட்டசபைத் தேர்தலையும் ராஜபக்சே நடத்தக் கூடும்.

அதிபர் ராஜபக்சேவின் பதவிக்காலம் 2011ம் ஆண்டு நவம்பர் மாதம்தான் முடிகிறது. ஆனால் தற்போது நிலவும் சூழ்நிலையை பயன்படுத்தி மீண்டும் அதிபராகி விட ராஜபக்சே திட்டமிட்டுள்ளார். முன்னதாக தேர்தலை நடத்தாமலேயே அவர் தனது பதவியை நீட்டித்துக் கொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை அரசு மறுத்து விட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X