இத்தாலி ரயிலில் கேஸ் டேங்கர் வெடித்து 10 பேர் பலி
வியாரெஜியோ (இத்தாலி): இத்தாலியில், காஸ் டேங்கர்களுடன் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது. அப்போது இரண்டு காஸ் டேங்கர்கள் வெடித்துச் சிதறியதில் 10 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வியாரெஜியோ பிராந்தியத்தில் உள்ள துஸ்கான் என்ற நகரில் இந்த சம்பவம் நடந்தது.
காஸ் டேங்கர்கள் கீழே விழுந்த வேகத்தில் வெடித்துச் சிதறியுள்ளன. அப்போது அருகில் இருந்த சாலை மற்றும் 10 வீடுகளை தீ சூழ்ந்ததில் 10 பேர் கருகி உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
குண்டு வெடித்தது போல பெரும் சப்தம் கேட்டதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் 35 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
300க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.
தடம் புரண்டு விழுந்துள்ள மற்ற கேஸ் டேங்கர்களை பத்திரமாக அப்புறப்பப்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன. அவையும் எந்த நேரத்திலும் வெடித்து விடலாம் என்பதால் பெரும் அபாயம் நிலவுகிறது.
14 பெட்டிகளைக் கொண்ட இந்த சரக்கு ரயில், பிசா நகருக்குப் போய்க் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது.












Click it and Unblock the Notifications