விஷ ஊசி-2 மகள்களை கொன்ற பெண் மன நல டாக்டர்
டெல்லி: குடும்ப தகராறு காரணமாக தனது இரண்டு மகள்களுக்கும் விஷ ஊசி போட்டு கொலை செய்த பெண் மனநல டாக்டர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்டார். மனநல டாக்டர் ஒருவரின் இந்த விபரித முடிவு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ரோகிணி பகுதியில் இருக்கும் அம்பேத்கார் மருத்துவமனையில் மனநல மருத்துவராக பணிபுரிந்து வருபவர் டாக்டர் ரூபா. இவரது கணவர் ராஜ், நரேலாவில் உள்ள சத்தியவதி ராஜா அரிச்சந்திரா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு தான்யா (4), டுவிங்கில் (3) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர்.
இந்நிலையில் டாக்டர் ரூபா தனது கணவரிடம் தனியாக மருத்துவமனை துவங்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால், அதற்கு ராஜ் மறுத்துவிட்டார். இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றும் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடு்தது ரூபா மாலை சுமார் 5 மணிக்கு வீட்டில் இருந்து கோபித்து கொண்டு தனது இரு மகள்களுடன் அப்பகுதியில் ஹோட்டல் சிட்டி பார்க்கில் சென்று தங்கியுள்ளார்.
மாலை 6 மணிக்கு ஷாப்பிங் சென்று குழந்தைகளுக்கு விளையாட்டு பொம்மை வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் அவர் ஒரு மருந்து கடைக்கு சென்று விஷ ஊசிக்கான மருந்துகளை வாங்கி கொண்டு ஹோட்டலுக்கு திரும்பியுள்ளார்.
அதை இரண்டு குழந்தைகளுக்கு செலுத்திவிட்டு தனக்கு போட்டு கொண்டுள்ளார். பின்னர் தனது கணவருக்கு போன் செய்து விபரத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது கணவர் அந்த ஹோட்டலுக்கு போன் செய்து அவர்களை உடனே காப்பாற்றுமாறு கூறினர்.
இதையடுத்து அவர்கள் அருகிலிருந்த மேக்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால், டாக்டர்கள் குழந்தைகள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர். டாக்டர் ரூபா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். டாக்டர் ரூபாவின் உடல்நிலை தேறியவுடன் விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications