For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'காலம் கலி காலம்'!- 17ஐ கடத்திய 15

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்வேலி: 17 வயது பள்ளி மாணவியை 15 வயது பள்ளி மாணவர் கடத்திச்
சென்றதாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் காதலாம்!!.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ளது சின்னக் கோவிலான் குளம். இந்த கிராமத்தைச் சேர்ந்த துரைப்பாண்டியின் மகள் செல்வி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சங்கரன்கோவில் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகன் என்பவரின் மகன் அழகுதுரை (15). இவர் வடமலாபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார்.

கவிதாவும், அழகுதுரையும் உறவினர்கள். அக்கா, தம்பி முறை என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து கவலைப்படாமல் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இதை கண்டித்த செல்வியின் பெற்றோர், அவரை தாத்தா வீட்டுற்கு அனுப்பி வைத்தனர். அவர் அங்கிருந்து பள்ளிக்கு சென்று வந்தார்.

இந் நிலையில் செல்வியை திடீரென காணவில்லை. அவரை அழகுதுரை தான் கடத்திச் சென்று மறைத்து வைத்துள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X