வெளிநாட்டு வேலை-முன்னாள் வங்கி ஊழியர் கைது
சென்னை: இணையதளம் மூலம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய முன்னாள் வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
வெளிநாட்டு வேலை தமிழர்களை ஆட்டுவித்து கொண்டிருக்கிறது. உலக பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட அமெரிக்கா, அரபு நாடுகளில் இருப்பவர்களுக்கு வேலை பறிபோய் வரும் சூழ்நிலையில் இன்னும் பலர் இந்த வெளிநாட்டு வேலையின் மீதுள்ள மோகம் குறையாமல் இருக்கின்றனர்.
அவர்களில் ஒருவர் தான் அரியலூரை சேர்ந்த செந்தில்குமார்(25). இவருக்கு சமீபத்தில் லண்டனில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரூ. 2 லட்சம் சம்பளத்துக்கு முன்பதிவு அலுவலர் வேலை காலி இருக்கிறது. உங்களுக்கு சேர விருப்பமா என கேட்டு இ-மெயில் ஒன்று வந்தது.
எப்படியாவது வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த செந்தில்குமார் இந்த வாய்ப்பை கோட்டைவிட கூடாது என முடிவு செய்தார்.
இதையடுத்து அவரிடம் விசா பதிவு, விமான டிக்கெட் மற்றும் இதர செலவுகள் எனக்கூறி அந்த மர்ம ஆசாமிகள் செந்தில் குமாரிடம் ரூ. 8 லட்சத்து 9 ஆயிரத்து 300 கேட்டனர். அவரும் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பணத்தை கொடுத்தார். ஆனால், அவருக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.
இதையடுத்து அவர் கடந்த மாதம் 17ம் தேதி சிபிசிஐடி போலீசாரிடம் விசாரணை செய்தார். இதையடுத்து விசாரணை களத்தில் இறங்கிய சைபர் போலீசார் அதிரடியாக செயல்பட்டனர். செந்தில் குமார் வங்கிகளில் போட்ட பணத்தின் ரசிதை வைத்து விசாரணையை ஆரம்பித்தனர்.
அவர்கள் கடந்த 5ம் தேதி மகராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தை சேர்ந்த மீரா கிழக்கு சாலையை சேர்ந்த சுனில் டிகவாலே என்பவரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஒருவருக்கு இந்த டிகவாலே தனது வங்கி கணக்கில் இருந்து ரூ. 1.3 லட்சம் எடுத்து கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். அவர் சென்னை கொண்டு வரப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவர் ஒரு முன்னாள் வங்கி ஊழியர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது












Click it and Unblock the Notifications