கூடுதல் பயணிகளை ஏற்றிய ஏர் இந்தியா ஊழியர்கள் - 9 பேர் சஸ்பெண்ட்
டெல்லி: ஏகப்பட்ட சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு புதுச் சிக்கல் எழுந்துள்ளது. மும்பை - மங்களூர் விமானத்தில் கூடுதலாக 3 பயணிகளை ஏற்றிச் சென்றது தெரிய வந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த செயலுக்குக் காரணமானவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் எனவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
கூடுதல் பயணிகள் ஏற்றப்பட்டது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் இயக்குநர் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், சம்பந்தப்பட்ட வி்மானத்தில் மே 5ம் தேதி ஒரு பயணி (பெண்) கூடுதலாக ஏற்றப்பட்டு விமானியின் அறையில் அமர வைத்து பயணம் செய்துள்ளார்.
அதேபோல மேலும் 2 பேர் பிளைட் அட்டென்டுகளுக்கான சீட்களில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
இது பாதுகாப்பு விதிமுறைகளுக்கு முற்றிலும் புறம்பானது மட்டுமல்லாமல், சட்டவிரோதமான செயலும் ஆகும். ஒரு வேளை சம்பந்தப்பட்ட விமானம் விபத்தில் சிக்கியிருந்தால், அந்த 3 பேரின் குடும்பத்தினருக்கும் எந்தவித இழப்பீடும், நிவாரணத் தொகையும் கிடைத்திருக்காது.
இந்த தவறை இழைத்தவர்கள் மீது கிரிமனல் வழக்கு தொடரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சட்டவிரோதமாக பயணம் செய்த அந்த மூன்று பேரும் ஒரு மூத்த விமானியின் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.
3 பேரை கூடுதலாக பயணிக்க வைத்ததாக 9 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்கள் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
-
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தல.. இந்திய டீம் தோற்கணும்னு சொல்லி அடிவாங்கும் பாகிஸ்தான் அமீர் -
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய்












Click it and Unblock the Notifications