கடையநல்லூரில் மான் சுட்டுக் கொலை
கடையநல்லூர்: கடையநல்லூர் காட்டு பகுதியில் மானை சுட்டு கொன்ற கும்பலை பிடிக்க வனத்துறை சார்பில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு வெளிமாவட்டங்களில் தீவிரமாக தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடையநல்லூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வனத்துறையினர் இரவு நேரத்தில் மேற்கொண்ட ரோந்தின் போது ஜீப் ஓன்றில் வந்தவர்கள் மான் ஓன்றை சுட்டு கொன்றதை கண்டறிந்தனர்.
வனத்துறையினரை கண்ட கும்பல் ஜீப்பை விட்டு விட்டு காட்டுகள் தப்பியோடி விட்டனர். இந்த சம்பவம் வனத்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே மான் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மாவட்ட வனஅலுவலர் அப்புரோஸ் உத்தரவின்படி மானை சுட்ட கும்பலை பிடிக்க வனவர ஆர்தர் ராஜா தலைமையிலும், வனவர் இஸ்மாயில் தலைமையிலும், வனசரக அலுவலர் ராஜகுலசேகர பாண்டியன் தலைமையிலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
காட்டிற்குள் பிடிபட்ட ஜீப் சென்னையில் பதிவு செய்யப்பட்டு அது தற்போது தென்காசியில் பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வெளிமாவட்டங்களில் இருக்க கூடும் என்ற சந்தேகம் நிலவி வருவதால் வனத்துறையினர் வெளி்மாவட்டங்களிலும் தங்களது தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications