யுஎஸ்-என்ஜினியர் மீது மனைவி வரதட்சணை புகார்
காஞ்சிபுரம்: ரூ. 10 லட்சம் வரதட்சணை கேட்டு தன்னைக் கொடுமைப்படுத்துவதாக அமெரிக்காவில் பணியாற்றும் சாப்ட்வேர் என்ஜினியர் மீது அவரது மனைவி போலீசில் புகார் தந்துள்ளார்.
சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த சங்கரின் மகள் விஜயலட்சுமிக்கும் (33), காஞ்சிபுரம் அருகே பாலுச்செட்டி சத்திரத்தைச் சேர்ந்த பாரிக்கும் (38) 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சாப்ட்வேர் என்ஜினியரான பாரி, மனைவியுடன் அமெரிக்காவில் வசித்தார்.
இந் நிலையில் விஜயலட்சுமியை அவரது வீட்டில் ரூ. 10 லட்சம் வரதட்சணை வாங்கி வரக் கூறி பாரி கொடுமைப்படுத்தவே விஜயலட்சுமி சென்னை திரும்பினார்.
வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைப்படுத்துவதாக கோபாலபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். கணவரின் பெற்றோர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிப்பதால் அங்குள்ள மகளிர் காவல் நிலையத்திலும் புகார் செய்யுமாறு போலீசார் கூறவே இன்று காஞ்சிபுரதிலும் விஜயலட்சுமி புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.
-
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
LPG Gas Cylinder Shortage LIVE: நாளை முதல் இட்லி, தோசை கிடைக்காது.. சென்னை ஹோட்டல்கள் சங்கம் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி!












Click it and Unblock the Notifications