யுஎஸ்-என்ஜினியர் மீது மனைவி வரதட்சணை புகார்
காஞ்சிபுரம்: ரூ. 10 லட்சம் வரதட்சணை கேட்டு தன்னைக் கொடுமைப்படுத்துவதாக அமெரிக்காவில் பணியாற்றும் சாப்ட்வேர் என்ஜினியர் மீது அவரது மனைவி போலீசில் புகார் தந்துள்ளார்.
சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த சங்கரின் மகள் விஜயலட்சுமிக்கும் (33), காஞ்சிபுரம் அருகே பாலுச்செட்டி சத்திரத்தைச் சேர்ந்த பாரிக்கும் (38) 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சாப்ட்வேர் என்ஜினியரான பாரி, மனைவியுடன் அமெரிக்காவில் வசித்தார்.
இந் நிலையில் விஜயலட்சுமியை அவரது வீட்டில் ரூ. 10 லட்சம் வரதட்சணை வாங்கி வரக் கூறி பாரி கொடுமைப்படுத்தவே விஜயலட்சுமி சென்னை திரும்பினார்.
வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைப்படுத்துவதாக கோபாலபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். கணவரின் பெற்றோர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிப்பதால் அங்குள்ள மகளிர் காவல் நிலையத்திலும் புகார் செய்யுமாறு போலீசார் கூறவே இன்று காஞ்சிபுரதிலும் விஜயலட்சுமி புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.












Click it and Unblock the Notifications