For Daily Alerts
Just In
சட்டசபை இடைத் தேர்தல் - இன்று மனு தாக்கல் தொடக்கம்
சென்னை: 5 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வருகிற 29ம் தேதி வரை மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.
இளையாங்குடி, தொண்டாமுத்தூர், கம்பம், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய ஐந்து சட்டசபைத் தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 18ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இன்று முதல் 29ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம்.
ஜூலை 30ம் தேதி மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெறலாம். அன்று மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.
ஆகஸ்ட் 18ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். பதிவான வாக்குகள் ஆகஸ்ட் 22ம் தேதி எண்ணப்படும்.
Comments
Story first published: Wednesday, July 22, 2009, 9:16 [IST]