For Daily Alerts
Just In
தமிழகத்துக்கு நீர்: எந்த சிக்கலும் இல்லை-எதியூரப்பா
மைசூர்: கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிவதால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதில் எந்த சிக்கலும் இல்லை என்று அம் மாநில முதல்வர் எதியூரப்பா கூறினார்.
கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பி வழிந்து வருவதையடுத்து இன்று சிறப்புப் பூஜை நடத்திய எதியூரப்பா நிருபர்களிடம் பேசுகையில்,
கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிவதால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதில் எந்த சிக்கலும் இல்லை.
இரு மாநிலங்களிலும் உள்ள விவசாயிகளையும் நான் சமமாகவே மதிக்கிறேன். விவசாயிகளுக்கு உதவுவது எனது அரசின் கடமை.
இந்த அணை கட்டப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி மிகச் சிறப்பான கொண்டாட்டம் நடத்தப்படும் என்றார்.
கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீ்ர் மட்டம் கடந்த 20 நாட்களி்ல் 54 அடி உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Friday, July 24, 2009, 16:40 [IST]