இலங்கைக்கு 2.5 பி்ல்லியன் ஐஎம்எப் கடன்-மனித உரிமைக் கண்காணிப்பகம் கண்டனம்
கொழும்பு: சர்வதேச நிதியம், இலங்கைக்கு 2.5 பில்லியன் டாலர் கடனுதவிக்கு இன்று ஒப்புதல் வழங்கும் எனத் தெரிகிறது. இந்த முடிவு துரதிர்ஷ்டவசமானது என்று மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசிய பிரிவுக்கான இயக்குநர் பிராட் ஆடம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 26 ஆண்டுகளுக்கும் மேலான இனப் போரில், ஏற்பட்ட மனித உரிமை மீறல் தவறுகளை இலங்கை அரசு நிவர்த்தி செய்து கொண்ட பின்னரே இந்த கடன் தொகை வழங்கப்பட வேண்டும்.
இன்னும் 2 லட்சத்து 80 ஆயிரம் மக்களை இலங்கை அரசு வேலி போட்ட முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறது. இது முற்றிலும் மனித உரிமைகளை மீறும் செயலாகும். மேலும், பத்திரிக்கையாளர்கள், சமூக சேவையாளர்கள் உள்ளிட்டோர் மீதான தாக்குதல்கள் குறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டும்.
ஆனால் இவையெல்லாம் செய்யப்படாமலேயே மிகப் பெரிய கடன் தொகையை வழங்க சர்வதேச நிதியம் முன்வருவது வேதனைக்குரியது, கண்டனத்துக்குரியது, துரதிர்ஷ்டவசமானது.
ஆயிரக்கணக்கான மக்களை முகாம் என்ற பெயரில் அடைத்து வைத்திருக்கும் ஒரு அரசுக்கு, இவ்வளவு பெரிய கடன் தொகையை வழங்குவது மோசமான முன்னுதாரணமாகி விடும். சர்வதேச நிதியம் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
முன்னதாக 1.91 பில்லியன் டாலர் கடனுதவியைத்தான் இலங்கை கோரியது. பின்னர் இதை 2.5 பில்லியன் டாலராக அது அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் இந்த கடன் தொகையைத் தர அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனால் ஐஎம்எப் கடன் தருவதை நிறுத்தி வைத்திருந்தது.
ஆனால் சீனா மற்றும் இந்தியாவின் கை மேலோங்கி வருவதைப் பார்த்த அமெரிக்கா பயந்துபோய் இலங்கைக்கு கடன் தர சம்மதித்தது என்பது நினைவிருக்கலாம்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications