ராணுவத்தை விட்டு ஓடிப் போனவர்களுக்கு ராஜபக்சே மன்னிப்பு - 1800 பேர் விடுதலை
கொழும்பு: விடுதலைப் புலிகளின் கடும் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ராணுவத்தை விட்டு ஓடிப் போன 1800 பேருக்கு பொது மன்னிப்பு அளித்து அவர்களை விடுதலை செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இவர்களில் 50 பேர் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளுடன் நடந்த சண்டையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பெருமளவிலான ராணுவத்தினர் கடந்த காலங்களில் ராணுவத்தை விட்டே ஓடிப் போனார்கள்.
அவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அடங்கும். ஒரு போராளி அமைப்பின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஒரு நாட்டின் ராணுவத்தினர் இந்த அளவுக்கு ஓடிப் போனது இலங்கையில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது போர் முடிந்து விட்டதால் ஓடிப் போன ராணுவத்தினரை சரணடையுமாறு இலங்கை அரசு அழைப்பு விடுத்து வருகிறது. அவ்வாறு சரணடைபவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கவும் அதிபர் ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் ராணுவத்திலிருந்து ஓடிப் போய் பிடிபட்ட 1800 பேருக்கு பொது மன்னிப்பு அளிக்க ராஜபக்சே முடிவு செய்துள்ளார். இவர்களில் 50 பேர் அதிகாரிகள் ஆவர்.
இவர்கள் சிறையில் ஒரு வருடத்தைக் கழித்துள்ளனர். கடந்த மாதம் 585 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
அடுத்தடுத்து மற்றவர்களும் விடுவிக்கப்படவுள்ளதாக நீதித்துறை தெரிவித்துள்ளது. தற்போது புலிகளுடன் மோதல் முடிந்து விட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நீதித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
2003ம் ஆண்டு ராணுவத்தை விட்டு ஓடிப் போன 51 ஆயிரம் பேரை ராணுவத்திலிருந்து முறைப்படி நீக்க அரசு முடிவு செய்தது என்பது நினைவிருக்கலாம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications