புதுச்சேரி ஆளுநராக இக்பால் சிங் பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக இக்பால் சிங் இன்று பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கோகலே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
புதுவை மாநில துணை நிலை ஆளுநராக பதவி வகித்து வந்த கோவிந்த் சிங் குர்ஜார் ராஜஸ்தானில் பிறந்தநாள் கொண்டாட சென்றபோது மாரடைப்பால் காலமானார்.
இதையடுத்து பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த இக்பால் சிங் இந்தப் பதவியில் நியமிக்கப்பட்டார். அவர் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
புதுச்சேரி கவர்னர் மாளிகையான ராஜ் நிவாஸில் நடந்த பதவியேற்பு விழாவில் அவருக்கு நீதிபதி கோகலே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
விழாவில் முதல்வர் வைத்திலிங்கம், மத்திய அமைச்சர் நாராயணசாமி, மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications