வடக்கு-தெற்கு..தமிழ்நாட்டை 2ஆக பிரிக்கனுமாம்!

வட தமிழகம் தென் தமிழகம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், மூவேந்தர் முன்னணி கழகத் தலைவருமான டாக்டர் என்.சேதுராமன் மற்றும் வன்னியர் சங்க கூட்டமைப்புத் தலைவர் ஏ.கே. நடராஜன் ஆகியோர் நிருபர்களிடம் பேசுகையில்,
மொழி வாரியாக மாகாணம் பிரிக்கப்பட்டபோது, தமிழகத்தின் மக்கள் தொகை 3 கோடியாக இருந்தது. தற்போது சுமார் 7 கோடியை தொடும் நிலையில் உள்ளது.
எனவே நிர்வாக வசதி கருதி, இந்திய இறையாண்மைக்கு உட்பட்டு தமிழகத்தை காவிரிக் கரையை எல்லையாகக் கொண்டு வட தமிழகம், தென் தமிழகம் என்று இரு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் 11 மாகாணங்கள் இருந்தன. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இன்று 32 மாநிலங்கள் உருவாகியுள்ளன.
தெலுங்கானா, போஜ்புரி, கூர்க்காலாந்து, மித்திலாஞ்சல் உட்பட பல்வேறு புதிய மாநிலங்களுக்கான கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய மாநிலமாக தமிழகத்தை இரு மாநிலங்களாக பிரித்தால்தான் சமமான வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்படும்.
எனவே தமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆகஸ்ட் 19ம் தேதி சென்னையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். அதைத் தொடர்ந்து விழிப்புணர்வு நடைபயணம், தொடர் கருத்தரங்கம் நடைபெறும்.
மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துகிற சந்திரசேகர் ராவ், அஜீத் சிங் உள்ளிட்ட தலைவர்களை சென்னைக்கு அழைத்து மாநாடு ஒன்றையும் நடத்த திட்டமிட்டிருக்கிறோம் என்றனர்.
வன்னியர் சங்க கூட்டமைப்புத் தலைவர் ஏ.கே. நடராஜன் வைக்கும் இதே கோரிக்கையை பாமக நிறுவனர் டார்டர் ராமதாசும் சில ஆண்டுகளுக்கு முன் கோரியது நினைவுகூறத்தக்கது.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications