ஏஓஎல் பங்குளை கூகுளிடமிருந்து திரும்பப் பெற்ற டைம் வார்னர்!
சான் பி்ரான்ஸிஸ்கோ: கூகுள் வசமிருந்த ஏஓஎல் நிறுவனத்தின் 5 சதவிகித பங்குகளை திரும்ப வாங்கியுள்ளது டைம் வார்னர் நிறுவனம். இதற்காக கூகுளுக்கு ரூ.283 மில்லியன் டாலர் அளித்துள்ளது வார்னர் நிறுவனம்.
கடந்த ஜனவரியில் இந்தப் பங்குகளை டைம் வார்னர் நிறுவனத்திடமிருந்து 1 பில்லியன் டாலருக்கு வாங்கியது கூகுள்.
ஆனால் கொஞ்ச நாளிலேயே அவற்றின் மதிப்பு 70 சதவிகிதம் வீழந்தது. எனவே மீண்டும் ஏஓஎல் பங்குகளை திரும்ப வாங்கிக் கொள்ள டைம் வார்னர் முடிவு செய்தது.
2001-ல் டைம் வார்னர் நிறுவனத்தை வாங்கியது ஏஓல். அன்றைக்கு ஏஓஎல்தான் இன்டர்நெட் சேவை வழங்குவதில் முன்னணியில் இருந்தது.
அதன்பிறகு வர்த்தகம் சரிந்து, சந்தை படு டல்லடித்துப் போய்விட்டது. ஆன்லைன் விளம்பரங்களிலும் போதிய வருவாய் இல்லை.
இப்போது நடந்துள்ள இந்த பங்குமாற்றத்தில் சில உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. கடந்த ஆண்டு ஏஓஎல் 1.5 பில்லியன் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இந்த ஆண்டு முதல் காலாண்டில் 82.7 மில்லியன் லாபம் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications