புதுச்சேரியில் குண்டு வீசி 2 ரவுடிகள் கொலை
புதுச்சேரி: புதுச்சேரி முதலியார் பேட்டையில் இரு ரவுடிகளை அவர்களது எதிர்கோஷ்டி வெடிகுண்டுகளை வீசியும் அரிவாள்களால் வெட்டியும் கொலை செய்தது.
புதுச்சேரி முதலியார் பேட்டை அனிதா நகரைச் சேர்ந்த ரவுடிகள் சாந்த மூர்த்தி, கருணா. இருவரும் குடோன்களுக்கு லாரிகளில் இருந்து சரக்குகளை ஏற்றி, இறக்கும் தொழிலாளர்களை சப்ளை செய்து வந்தனர்.
இதனால் இருவருக்கும் தொழில் போட்டி இருந்து வந்தது.
சில மாதங்களுக்க முன் கருணாவின் உறவினர்களான காந்தி, பரசுராமன் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இதில் சாந்தமூர்த்தி தரப்புக்கு தொடர்புள்ளதாகக் கருதப்படுகிறது.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கருணா ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ளான். ஆனாலும் சிறையில் இருந்தவாரே தனது ரவுடி ராஜாங்கத்தை தனது ஆட்கள் மூலம் நடத்தி வருகிறான்.
அதே போல் சாந்த மூர்த்தியும் வழக்கு ஒன்றில் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் வெளியில் வந்தான்.
சாந்த மூர்த்தி காரைகாலில் தங்கியிருந்து கையெழுத்து போடுமாறு நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. ஆனால், அவன் அங்கு கையெழுத்து போடாமல் புதுவையில் இருந்து வந்தான். இதையடுத்து அவனது ஜாமீனை ரத்து செய்து பிடிவராண்டு பிறப்பிக்குமாறு புதுவை காவல்துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்நிலையில் கருணா கோஷ்டியும், சாந்தமூர்த்தி கோஷ்டியும் அரியாங்குப்பம் மணவெறி அருகே உள்ள தென்னந்தோப்பில் சமாதான பேச்சு நடத்தினர். பேச்சுவார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்டதில் சாந்த மூர்த்தியையும், அவனது கூட்டாளி ராஜீவ் காந்தி ஆகியோர் கருணா கோஷ்டி வெடிகுண்டுகளை வீசியும், கத்தியால் வெட்டியும் கொலை செய்தது.
இது குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications