மதுரையில் பெண் போலீஸ்காரரை கட்டிப் போட்டு நகை கொள்ளை
மதுரை: வீட்டில் தனியாக இருந்த பெண் போலீஸ்காரரை கட்டிப் போட்டு அவர் அணிந்திருந்த நகைகள் வீட்டில் இருந்த ரொக்கம் ஆகியவற்றை மர் நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர் .
மதுரை தெற்குவாசல் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக பணிபுரிபவர் முருகேஸ்வரி (32). திருமணமாகாத இவர் அவனியாபுரம் பை-பாஸ் அருகே உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
முருகேஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் மூன்று பேர் முகமூடி அணிந்தபடி அவரது வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது முருகேஸ்வரியை அந்த கும்பல் கயிற்றால் கட்டி போட்டு , தாக்கியது.
பின்பு, முருகேஸ்வரி அணிந்திருந்த 4 பவுன் நகைகளை பறித்தனர். மேலும் வீட்டில் இருந்த 5 ஆயிரம் ரொக்கத்தையும் எடுத்து கொண்டு அங்கிருந்து அந்த
கும்பல் தப்பி சென்றது.
இது குறித்து முருகேஸ்வரி அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் போரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ் சூப்பிரண்டு மனோகர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications