போலீஸுக்கு சவால் விடும் மாஜி போலீஸ் அதிகாரிகள்!
சென்னை: சென்னை நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்களில் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு அதிகாரிகளாக சேர்ந்து வருவதால், அந்த ஹோட்டல்களில் நடைபெறும் தவறுகள் குறித்து நடவடிக்கை எடுக்க முடியாமல் தவித்து வருகிறதாம் காவல்துறை.
டெல்லியைச் சேர்ந்த மாடல் அழகியான ஜோதி சிங் என்பவர் சமீபத்தில் சென்னை காவல்துறையில் ஒரு புகார் கொடுத்தார். அதில், ஒரு ஸ்டார் ஹோட்டலின் பப்புக்கு வெளியே தன்னை நான்கு பேர் நள்ளிரவு 1 மணியளவில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்த முயன்றனர். ஆனால் அங்கு பாதுகாப்பு அதிகாரிகளாக பணியாற்றி வரும் முன்னாள் போலீஸ் அதிகாரிகளான பன்னீர் செல்வம், வள்ளிநாயகம், ரத்தினசபாபதி ஆகியோர் விசாரணைக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த ஹோட்டல் மட்டுமல்லாமல் நகரில் உள்ள பெரும்பாலான நட்சத்திர ஹோட்டல்களில் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு அதிகாரிகளாக பணியாற்றுகின்றனர். தங்களது வசதிக்காக ஹோட்டல் நிர்வாகங்கள் இதுபோல செய்கின்றன. இதனால் சம்பந்தப்பட்ட ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ அல்லது விசாரணைக்கு செல்லவோ முயன்றால் மாஜி போலீஸார் ரூபத்தில் இடையூறுகள் வருகிறதாம்.
பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும் கூட சில போலீஸ் அதிகாரிகளுக்கு காவல்துறை வட்டாரத்தில் நல்ல செல்வாக்கு உள்ளதால், தவறு செய்யும் ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் இவர்கள் தடுத்து காப்பாற்றி விடுகின்றனராம்.
முன்னால் ஐபிஎஸ் அதிகாரிகளான நாஞ்சில் குமரன், பாலச்சந்திரன் ஆகியோர் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகின்றனராம். ஆனால் இவர்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இது வரவில்லை. ஆனால் பிற மாஜி போலீஸார், தாங்கள் பணியாற்றும் ஹோட்டல்களைக் காக்கும் வகையில் நடந்து கொள்வதாக புகார் கூறப்படுகிறது.
முன்னாள் காவல்துறையினர் பணியாற்றும் ஹோட்டல்களுக்கு செல்லக் கூட முடியாத நிலை இருப்பதாக உள்ளூர் இன்ஸ்பெக்டர்கள் புலம்புகின்றனராம்.
சமீபத்தில், ஒரு ஹோட்டலில் ரெய்டு நடத்த போலீஸ் படை சென்றபோது, அந்த ஹோட்டலின் கார் பார்க்கிங் பகுதியில் கூட போலீஸ் ஜீப்பை நிறுத்து விடாமல் கெடுபிடி செய்து வெளியேற்றி விட்டனராம்.
அரசு இதுகுறித்து தலையிட்டு நடவடிக்கை எடுத்தால்தான் தவறு செய்யும் ஹோட்டல் நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது சாத்தியம் என்று காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications