பொட்டு அம்மான் உயிருடன் இல்லை - உதய நாணயக்காரா
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்க உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக இலங்கை உளவுப் பிரிவு கூறியுள்ளதாக வெளியான செய்தியை அந்த நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா மறுத்துள்ளார்.
பொட்டு அம்மான உயிருடன் இருப்பதாகவும், அவர் தப்பிச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளதாகவும், இலங்கை அரசிடம் அந்நாட்டு உளவுப் பிரிவு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் இதை உதய நாணயக்காரா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எங்களைப் பொறுத்தவரை பொட்டு அம்மான் இறந்து விட்டார் என்பதே உண்மை. ஆனால் அவரது சடலம் இதுவரை கிடைக்கவில்லை என்று நாணயக்காரா தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications