காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இந்தியாவுடன் பேசத் தயார் - கிலானி
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து டிவி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், எந்தப் பிரச்சினைக்கும் போர் தீர்வாகாது. இந்தியா, பாகிஸ்தான் இடையிலான அனைத்துப் பிரச்சினைகளுக்கும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே சிறந்தது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்த்தால்தான் இரு நாட்டு அரசுகளும், தத்தமது மக்கள் பிரச்சினைகளைக் கவனிக்க முடியும்.
பாகிஸ்தான், இந்தியா இடையே சமத்துவமான அந்தஸ்துடன் கூடிய நட்புறவு நிலவ வேண்டும் என்றே பாகிஸ்தான் எப்போதும் கோரி வருகிறது.
இரு நாடுகளிலும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு, அடிப்படைத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன.
இவற்றையெல்லாம் தீர்க்க வேண்டுமானால் காஷ்மீர் உள்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றார் கிலானி.












Click it and Unblock the Notifications